/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பணம் வைத்து சூதாட்டம் 30 பேரிடம் விசாரணை
/
பணம் வைத்து சூதாட்டம் 30 பேரிடம் விசாரணை
ADDED : ஆக 29, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், ஆக. 29-
கரூர் அருகே, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, 30 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
கரூர்-கோவை சாலை திருகாம்புலியூர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நேற்று திருகாம்புலியூர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, 30 பேரை பிடித்து சென்று, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தினர்.

