sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் புதிய கழிப்பிடம் கட்ட பயணிகள் வேண்டுகோள்

/

கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் புதிய கழிப்பிடம் கட்ட பயணிகள் வேண்டுகோள்

கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் புதிய கழிப்பிடம் கட்ட பயணிகள் வேண்டுகோள்

கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் புதிய கழிப்பிடம் கட்ட பயணிகள் வேண்டுகோள்


ADDED : ஜூலை 14, 2024 03:18 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், புதிய கழிப்பிடம் கட்ட வேண்டும் என, பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள, கரூர் வழி-யாக நாள்தோறும், 40 க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. மேலும், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, நாள்தோறும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள், பய-ணிகள் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம், கரூர் நகருக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷன் பிளாட் பாரங்களில் உள்ள கழிப்பிடங்கள் பெரும் பாலும் பூட்டப்பட்டுள்ளன. இதனால், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில், புதிதாக நவீன வசதிகளுடன் பல ஆண்டுக-ளுக்கு முன், கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், அந்த கழிப்பி-டத்தை விரிவாக்க பணிக்காக தற்போது இடித்து விட்டனர்.

இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள், தொடர்ந்து திறந்த வெளிப்குதியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் புதிய கழிப்பிடங்களை கட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us