/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய பாலம் கட்டும் பணிக்கு ஆய்வு பணிகள் மும்முரம்
/
புதிய பாலம் கட்டும் பணிக்கு ஆய்வு பணிகள் மும்முரம்
புதிய பாலம் கட்டும் பணிக்கு ஆய்வு பணிகள் மும்முரம்
புதிய பாலம் கட்டும் பணிக்கு ஆய்வு பணிகள் மும்முரம்
ADDED : பிப் 24, 2025 03:23 AM
குளித்தலை,: புதிய பாலம் கட்டும் பணிக்கு, ஆய்வு பணிகள் நடந்தன.
குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., மருதுார், மேட்டு மருதுார் நெடுஞ்சாலையில் கொடிங்கால் வடிகால் வாய்க்கால், சிவாயம் காட்டுவாரி இரண்டும் மேட்டுமருதுார்
கல்லுப்பா-லத்தில் இணைகிறது. 1924ல், கருங்கற்களால் கல்லுப்பாலம் கட்-டப்பட்டது.இரண்டு மாதங்களுக்கு முன், கல்லுப்பாலத்தில் ஓட்டை விழுந்-தது. பொது மக்கள். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, மருதுார் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், புதிய பாலம் கட்டும் பணிக்காக, கோவை தனியார் கல்லுாரி மாணவர்கள் சார்பில், மண் பரிசோ-தனை நடைபெற்றது. இதில், தரமான இடம் என ஆய்வில் தெரி-யவந்தது.
இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் டவுன் பஞ்.. தலைவர் சகுந்தலா, செயல் அலுவலர் பானுஜெயராணி, கோவை தனியார் கல்லுாரி பொறியாளர். பணியாளர்கள் இயந்திரம் மூலம் பாலத்தை ஆய்வு செய்தனர். சேதமடைந்த கல்லுப்பாலத்தில், புதிய பாலம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

