/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தப்பாட்ட கலைஞர் தண்ணீரில் மூழ்கி பலி
/
தப்பாட்ட கலைஞர் தண்ணீரில் மூழ்கி பலி
ADDED : ஆக 15, 2024 01:36 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் பஞ்., வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் சண்முகசுந்தரம், 20. இவர் டிப்ளமோ படித்துள்ளார். மேலும் தப்பாட்ட கலைஞராக இருந்து வந்தார்.
நேற்று காலை 8:30 மணியளவில், வலையப்பட்டி கட்டளை மேட்டு வாய்க்காலில் குளிக்கும் போது, அதிகளவு தண்ணீர் வந்ததால் மூழ்கி உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் வாலிபரை போராடி மீட்டனர். பின்னர் அவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பணியில் இருந்த மருத்துவர்கள் சோதனை செய்த போது, ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சடலத்தை கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.