/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
/
மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED : ஆக 27, 2024 03:09 AM
கரூர்: நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.
அதில், மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. பிறகு, கால பைரவர் வடை மற்றும் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை யொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.