/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆற்றில் குளித்த 2 வாலிபர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்
/
ஆற்றில் குளித்த 2 வாலிபர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்
ஆற்றில் குளித்த 2 வாலிபர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்
ஆற்றில் குளித்த 2 வாலிபர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்
ADDED : ஆக 04, 2024 03:17 AM
குளித்தலை: குளித்தலை அருகே, நாகனுார் பஞ்., கலிங்கிப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சண்முகம், 23; திருச்சி தனியார் கம்-பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று மதியம், 2:00 மணிக்கு, நண்பர்களுடன், மாயனுார், மதுக்கரை செல்லாண்டி-யம்மன் கோவிலுக்கு சென்றார். பின், தடை செய்யப்பட்ட பகுதி-யான, காவிரி ஆற்றில் இருந்து பாசன வாய்க்கால் பிரிவு பகு-தியில், நண்பர்கள், நான்கு பேருடன் குளித்துள்ளார்.
அப்போது திடீரென சண்முகம் மாயமானார். இதனால் அதிர்ச்சி-யடைந்த நண்பர்கள், கரூர் தீயணைப்பு நிலைத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சண்முகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல-றிந்த கலெக்டர் தங்கவேல், சம்பவ இடத்தில் பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை ஆர்.டி.ஓ., தனலட்சுமி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், மாயனுார் இன்ஸ்பெக்டர் உள்பட பலர் உடனிருந்தனர்.
* இதேபோல், மருதுார் டவுன் பஞ்., கணேசபுரத்தை சேர்ந்-தவர் சுபாஷ், 30. இவர், நேற்று மாலை, 6:30 மணிக்கு, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் குளித்துள்ளார். அப்-போது நீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த முசிறி தீயணைப்பு வீரர்கள், தேடும் பணியில் ஈடுபட்டனர்.