/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.34.13 லட்சம் மதிப்புள்ள கொப்பரை, தேங்காய் ஏலம்
/
ரூ.34.13 லட்சம் மதிப்புள்ள கொப்பரை, தேங்காய் ஏலம்
ADDED : ஆக 27, 2024 03:07 AM
கரூர்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்ந்து, 34 லட்சத்து 13 ஆயிரத்து 92 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேங்காய் சாகுபடி நடக்கிறது. இங்கு தேங்காய்களை உடைத்து, காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணெய் எடுத்தது போக மீதமுள்ள பருப்பு, தேங்காய்களை, நொய்யல் அருகில் உள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் நடக்கும் ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சமாக, 27.65 ரூபாய், அதிகபட்சமாக, 33.99 ரூபாய், சராசரியாக, 31.92 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 2,004 கிலோ எடையுள்ள தேங்காய், 64 ஆயிரத்து, 506 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய், 662 மூட்டைகளில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 97.99 ரூபாய், அதிகபட்சமாக, 105.69 ரூபாய், சராசரியாக, 103.19 ரூபாய்க்கு விற்பனையாகின, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 76.12 ரூபாய், அதிகபட்சமாக, 104.99 ரூபாய், சராசரியாக, 96.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 33 ஆயிரத்து, 750 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 33 லட்சத்து, 48 ஆயிரத்து, 586 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 34 லட்சத்து, 13 ஆயிரத்து, 92 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.