/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனுமதியின்றி போராட்டம் 22 பேர் மீது வழக்கு பதிவு
/
அனுமதியின்றி போராட்டம் 22 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 21, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை : அனுமதியின்றி, சாலை மறியல் போராட்டம் நடத்திய, 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை அடுத்த, கொசூர் பஸ் நிறுத்தம் மூன்று வழிச்சாலையில் கடந்த, 18ல் காலை, 11:30 மணியளவில் அனுமதி இல்லாமல், காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் எச்சரிக்கை செய்தும், கண்டு கொள்ளாமல் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக, தொண்டமாங்கிணம் பஞ்., கவுண்டம்பட்டி சிவகுமார், 35, சிவா, 21, மற்றும் 20 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கரூருக்கு வரத்து அதிகரிப்பு

