sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி பாசன வாய்க்கால்களை விரைந்து துார் வார வலியுறுத்தல்

/

அமராவதி பாசன வாய்க்கால்களை விரைந்து துார் வார வலியுறுத்தல்

அமராவதி பாசன வாய்க்கால்களை விரைந்து துார் வார வலியுறுத்தல்

அமராவதி பாசன வாய்க்கால்களை விரைந்து துார் வார வலியுறுத்தல்


ADDED : ஜூன் 14, 2024 01:05 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம், செட்டிபாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து பாசன பகுதிகளுக்கு பல்வேறு வாய்க்கால்கள் செல்கின்றன. இதன்மூலம், 4,500 ஏக்கர் சாகுபடிநடந்து வருகிறது. அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் ராஜ வாய்க்கால்கள், சுக்காலியூர், செல்லாண்டிபாளையம், திருமாநிலையூர் வழியாக செல்கிறது. இந்த வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக முறையாக துார்வாரப்படாமல் உள்ளதால் முற்றிலும் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாக வாய்க்கால்கள் பாதையே தெரியாத நிலை உள்ளது.

இதுமட்டுமின்றி, பஞ்., மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெளியேறும் கழிவுநீரை, சுத்தகரிப்பும் இல்லாமல் நேரடியாக வாய்க்காலில் திறந்து விடுகின்றனர். அமராவதி ஆற்று கரையோரம் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து சாயக் கழிவுநீரும் வாய்க்காலில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கழிவுநீர் கலந்த தண்ணீர் விவசாய நிலங்களுக்கு பாய்வதால், அவை மலட்டு தன்மை கொண்டதாக மாறி வருகிறது. தற்போது பலர் விவசாயத்தை விட்டு வெளியேறி வருவதால், விளை நிலங்கள், விலை நிலங்களாக மாறி வரும் அவல நிலை தொடர்கிறது. அதனால், ஆறு, வாய்க்கால் மாசுபடுவதை தடுக்கவும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us