/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேற்கூரை அகற்றப்பட்டதால் மனு கொடுக்க வந்தோர் தவிப்பு
/
மேற்கூரை அகற்றப்பட்டதால் மனு கொடுக்க வந்தோர் தவிப்பு
மேற்கூரை அகற்றப்பட்டதால் மனு கொடுக்க வந்தோர் தவிப்பு
மேற்கூரை அகற்றப்பட்டதால் மனு கொடுக்க வந்தோர் தவிப்பு
ADDED : ஆக 06, 2024 02:26 AM
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மனுக்கள் கொடுக்க வருவோர் காத்திருக்கும் இடத்தில், மேற்கூரை அகற்றப்பட்டதால் மக்கள் வெயிலில் தவித்தனர்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், மனு கொடுக்க வருவோர் பெயரை பதிவு செய்து, மக்கள் வரிசையாக நிற்கும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திடீரென மேற்கூரை அகற்றப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், முதியோர், பெண்கள் ஆகியோர் வெயிலில் காத்திருந்தனர். அவ்வப்போது காற்று வீசியதால், அவதிப்பட்டனர். இதனால் மனு கொடுக்க வந்தோர் தவித்தனர்.