/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுவர், சிறுமிகளை பயிற்சிக்கு அனுப்புவதை தவிர்க்கணும்: கலெக்டர்
/
சிறுவர், சிறுமிகளை பயிற்சிக்கு அனுப்புவதை தவிர்க்கணும்: கலெக்டர்
சிறுவர், சிறுமிகளை பயிற்சிக்கு அனுப்புவதை தவிர்க்கணும்: கலெக்டர்
சிறுவர், சிறுமிகளை பயிற்சிக்கு அனுப்புவதை தவிர்க்கணும்: கலெக்டர்
ADDED : மே 11, 2024 11:20 AM
கரூர்: பொதுமக்கள் கோடை கால சிறப்பு பயிற்சி வகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு சிறுவர், சிறுமிகளை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், கரூர் மாவட்டத்தில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால், கோடை விடுமுறை நாட்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எல்லா வகையான பயிற்சி, சிறப்பு வகுப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திடுமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெற்றோர்களும் வெப்ப அலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, சிறுவர், சிறுமிகளை கோடை கால பயிற்சி, சிறப்பு வகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.