ADDED : செப் 16, 2024 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகிளிப்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், வாழைத்தார் விலை உயர்ந்தே விற்பனை செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த வாரம், 320க்கு விற்ற பூவன் தார், தற்போது, 350 ரூபாய், 250க்கு விற்ற கற்பூரவள்ளி, 300 ரூபாய், 350க்கு விற்ற ரஸ்தாலி, 400 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.

