/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து தங்க செயின் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து தங்க செயின் திருட்டு
ADDED : ஏப் 05, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை
அடுத்த, ஆர்.டி.மலை பஞ்., நாவல் நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்
சங்கப்பிள்ளை மனைவி தங்கமணி, 45. கடந்த, 1 மதியம், 12:30 மணியளவில்
தனக்கு சொந்தமான ஒரு கல் தோடு ஜோடி, தங்க காசு இரண்டு, மோதிரம் ஒன்று என
எட்டு கிராம் உள்ள தங்க நகைகளை அடகு கடையில் அடமானம் வைப்பதற்காக,
ஆர்.டி.மலை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது தோகைமலையை
சேர்ந்த கணேசன், 43, தெலுங்குபட்டியை சேர்ந்த சுமதி, 41, ஆகியோர்
நகைகளை திருடினர்.
இதுகுறித்து கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரித்து, இருவரையும் கைது செய்தனர்.

