/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
கரூர் அருகே குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
கரூர் அருகே குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
கரூர் அருகே குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : மே 01, 2024 02:07 AM
கரூர்:கரூர் மாநகராட்சி, பெரிய கோதுார் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கரூர் நகர பகுதிக்கு, பெரிய குளத்துப்பாளையம் வழியாகவும், ஈரோடு சாலைக்கு மூர்த்திப் பாளையம் வழியாகவும் செல்ல வேண்டும். ஆனால், பெரியகோதுாரில் இருந்து மூர்த்திப் பாளையம் வரையிலும், பெரிய குளத்துப்பாளையம் வரையிலுமான சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக, போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. மேலும், அந்த சாலைகளில் மின் விளக்குகளும் இல்லை.
இதனால், பெரிய கோதுார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கரூர் நகர் மற்றும் ஈரோடு சாலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் தடுமாறி கீழே விழுகின்றனர். கரூர் மாநகராட்சி மற்றும் மூன்று கிராம பஞ்சாயத்து பகுதிகளை, குண்டும், குழியுமான சாலை இணைக்கிறது. எனவே, பெரிய குளத்துப்பாளையம் முதல் மூர்த்திப்பாளையம் வரை, பெரிய கோதுார் சாலையை உடனடியாக சீரமைக்க, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.