sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அ.தி.மு.க., மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்

/

அ.தி.மு.க., மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்

அ.தி.மு.க., மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்

அ.தி.மு.க., மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்


ADDED : ஆக 02, 2024 04:08 AM

Google News

ADDED : ஆக 02, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நிலம் அபகரிப்பு புகாரில், கைது செய்யப்பட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, நேற்று அதிகாலை நிபந்-தனை ஜாமின் வழங்கி, கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 50; தொழிலதிபர். இவரது மகள் ேஷாபனா பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், செல்வராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்-சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் ஆகியோர், கிரையம் செய்து கொண்டதாக, கரூர் மேலக்கரூர் சார்-பதிவாளர் முகமது அப்துல் காதர் கடந்த ஜூன், 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் தொழிலதிபர் பிரகாஷ், வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஜூன், 22ல் அளித்த புகாரில் தோரணகல்பட்டி, குன்னம்-பட்டி பகுதியில் மகள் ேஷாபனா பெயரில் உள்ள, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் விஜ-ய

பாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மற்றும் ஆதரவாளர்கள், போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவு செய்து அபகரித்து கொண்டதாக கூறியுள்ளார். அதன்படி வாங்கல் போலீசார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்-ளிட்ட, பலர் மீது கொலை மிரட்டல் உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரண்டு வழக்குகளிலும், விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு கடந்த, 17 முதல் திருச்சி மத்-திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கும் வழக்கு, வாங்கல் போலீசார் விசாரிக்கும் வழக்கு ஆகியவற்றில் ஜாமின் கேட்டு, விஜயபாஸ்கர் தரப்பில் கரூர் நீதிமன்றத்தில் மனு-தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார் முன், விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறி-ஞர்கள் ஜாமின் வழங்க வேண்டும் என, வாதாடினர். ஆனால், சி.பி.சி.ஐ.டி., போலீசார், முன்னாள் அமைச்சருக்கு ஜாமின் தர எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதி பரத்குமார் நேற்று அதிகாலை, 12:15 மணிக்கு விஜயபாஸ்கருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதில், கரூர் சி.பி.சி.ஐ.டி., அலு-வலகத்தில் காலை, மாலை நேரங்களிலும், வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில், காலையில் மட்டும் முன்னாள் அமைச்சர் விஜய-பாஸ்கர் கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிடப்பட்டி-ருந்தது.

அதேபோல் நில அபகரிப்பு புகாரில், கைதாகி சேலம் மத்திய சிறையில் உள்ள, சென்னை வில்லிவாக்கம் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ், குளித்தலை கிளை சிறையில் உள்ள விஜயபாஸ்கரின் ஆதரவாளர் பிரவீனுக்கும், நிபந்தனை ஜாமின் வழங்கி, நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார்.

'தி.மு.க.,காரரின் துாண்டுதல்'

விஜயபாஸ்கர், நேற்று மாலை நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்-பட்டார். திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடந்ததாகக் கூறி, இரண்டு வழக்குகள் பதிவு செய்து, சிவில் வழக்கை கிரிமினல் வழக்-காக்கி, அரசியல் பழிவாங்கும் எண்ணத்தில் நடந்த சம்பவம் இது. நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது; ஜாமின் கிடைத்துள்-ளது. எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அவற்றை விட்டு விட்டு கையாலாகாத, தி.மு.க., அரசு பழிவாங்கும் நடவடிக்-கைகள் மட்டும் எடுத்து வருகிறது.

கரூரில் இருக்கும், தி.மு.க.,காரரின் துாண்டுதலின் பேரில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்து, வழக்கில் இருந்து வெளியே வருவோம். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இதை வைத்து கட்சியினரை பயமுறுத்த நினைப்பது நடக்காது. ஒரு வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,யிலும், ஒரு வழக்கை சட்-டம்-ஒழுங்கு போலீசிலும் போட்டுள்ளனர்.

டோட்டல் டீமே என்னை உள்ளே வைக்க, இரண்டு மாதம் வேலை செய்துள்ளனர். இந்த வழக்கின் மூலம், என்னை மட்டு-மல்ல கட்சியினர், என்னுடன் பழகியவர்கள் எல்லோரையும் தொந்தரவு செய்து விட்டனர். இது போல் நிறைய பார்த்து விட்டோம். இதற்கு மேல் ஒன்றும் இல்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us