/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமான பயணிகள் நிழற்கூடம் பொதுமக்கள் கடும் அவதி
/
சேதமான பயணிகள் நிழற்கூடம் பொதுமக்கள் கடும் அவதி
ADDED : செப் 15, 2024 02:45 AM
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, அரசு பள்ளி எதிரே எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் நிழற்கூடம் உள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வேலாயுதம்பாளையம் அருகே, புகளூரில் அரசு மேல்நிலைப்-பள்ளி செயல்படுகிறது. அதில், 100க்கும் மேற்பட்ட மாண-வர்கள் படித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன், பள்-ளிக்கு எதிரே மாணவர்கள், பொதுமக்கள் வசதிக்காக பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது.மேலும் அந்த பஸ் ஸ்டாப், சேலம்-கரூர் பழைய நெடுஞ்சா-லையில் உள்ளது. இதனால், அந்த வழியாக இயக்கப்படும் டவுன் பஸ்கள், நின்று செல்கிறது.
இந்நிலையில், நிழற்கூடம் பல மாதங்களாக சேதம் அடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில், கட்டடத்தில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால், எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்கூ-டத்தை இடித்து விட்டு, புதிதாக நிழற்கூடம் கட்டித்தர நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.