/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'மத்திய அரசின் விவசாயிகள் அடையாள அட்டை திட்டத்தை எதிர்க்க கூடாது'
/
'மத்திய அரசின் விவசாயிகள் அடையாள அட்டை திட்டத்தை எதிர்க்க கூடாது'
'மத்திய அரசின் விவசாயிகள் அடையாள அட்டை திட்டத்தை எதிர்க்க கூடாது'
'மத்திய அரசின் விவசாயிகள் அடையாள அட்டை திட்டத்தை எதிர்க்க கூடாது'
ADDED : செப் 12, 2024 07:36 AM
கரூர்: மத்திய அரசு கொண்டு வர உள்ள, விவசாயிக-ளுக்கான அடையாள அட்டை திட்டத்துக்கு, தமி-ழக அரசு ஒத்து போவது நல்லது என, காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் மகாதா-னபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் ஆதார் அட்டை போல, விவசாயிக-ளுக்கு அடையாள அட்டை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வேளாண்மை திட்டங்க-ளுக்கு விண்ணப்பிக்கும் போது, மாநில அரசுகள் அளிக்கும் விவசாய நிலங்கள் சாகுபடி குறித்த தரவுகள் மட்டுமே, மத்திய அரசிடம் உள்ளன. ஒவ்வொரு முறையும் இந்த பணிகளை மேற்-கொள்ள வேண்டியுள்ளது. அதில், சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்கு தீர்வு காண விவசாயிகள் பதிவேடு ஒன்றை, மத்திய அரசு தயாரிக்க உள்-ளது.தமிழகத்தில், 21 லட்சத்து, 62 ஆயிரத்து, 268 விவ-சாயிகள் பயன்பெற உள்ளதாக, மத்திய அரசு குறிப்பு தெரிவிக்கிறது. வேளாண்மை துறை மாநிலத்தின் கீழ் வருகிறது. அதில், மத்திய அரசு தலையிட்டு, மாநில அரசுகளை மட்டம் தட்டுகி-றது என, தமிழக அரசு இந்த திட்டத்தை எதிர்க்க கூடாது. மாறாக, தமிழக விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசுடன், தமிழக அரசு ஒத்து போவது நல்லது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.