sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் நகரில் அடிக்கடி விழும் பள்ளங்கள்: நிரந்தர தீர்வுக்கு பொதுமக்கள் கோரிக்கை

/

கரூர் நகரில் அடிக்கடி விழும் பள்ளங்கள்: நிரந்தர தீர்வுக்கு பொதுமக்கள் கோரிக்கை

கரூர் நகரில் அடிக்கடி விழும் பள்ளங்கள்: நிரந்தர தீர்வுக்கு பொதுமக்கள் கோரிக்கை

கரூர் நகரில் அடிக்கடி விழும் பள்ளங்கள்: நிரந்தர தீர்வுக்கு பொதுமக்கள் கோரிக்கை


ADDED : மே 15, 2024 10:58 AM

Google News

ADDED : மே 15, 2024 10:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் நகரப்பகுதிகளில் பாதாள சாக்கடை பகுதியில் அடிக்கடி பள்ளங்கள் விழுவதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, 48 வார்டுகளில், முதல் வார்டு முதல், 32 வது வார்டு வரை பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில், 14 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. மீதமுள்ள தான்தோன்றிமலை பழைய நகராட்சி மற்றும் சணப்பிரட்டி பழைய பஞ்சாயத்து பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டத்தை நடை முறைப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாஜி சாலை, ரத்தினம் சாலை, அண்ணாவளைவு, கோவை சாலை ஆகிய இடங்களில், பல முறை பள்ளம் ஏற்பட்டது. அதை, பல மாதங்கள் போராடி புதிய குழாய்கள் அமைத்து சரி செய்யப்பட்டது.

பாதாள சாக்கடை குழாய் பராமரிப்பு பணி நடக்கும் போது, அந்த சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படும். பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மாற்று பாதையில், செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மேலும், பள்ளம் விழுந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பெரும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், கரூர் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ள, இடங்களில் சாலையின் மேல் பகுதிகளில், பாதாள சாக்டை மூடிகள் சரிந்த நிலையில் உள்ளது. இதனால், மீண்டும் பள்ளம் விழுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர்.

மேலும், பள்ளம் விழும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வாகனங்களில் வீடுகளுக்கு செல்ல முடியாமல், வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாதாள சாக்கடை குழாயில் அழுத்தம் காரணமாக பள்ளம் ஏற்படும் போதெல்லாம், தற்காலிகமாக தீர்வை ஏற்படுத்துவதை விட்டு, நிரந்தர தீர்வை ஏற்படுத்தவும், சரிந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்யவும், கரூர் நகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us