sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

/

கரூர் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

கரூர் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

கரூர் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


ADDED : ஜூன் 15, 2024 06:58 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அரசு கலைக்கல்லுாரியில், இளம் அறிவியல், முதலமாண்டு மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு நேற்று நடந்தது.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு இளம் கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் கடந்த, 30 ல் தொடங்கியது.

சிறப்பு பிரிவுகளான என்.சி.சி., முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திற னாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடபிரிவுகளுக்கும், பி.காம்.,- பி.காம்., சி.ஏ.,- பி.பி.ஏ., ஆகிய பாடபிரிவுகளுக்கும், பி.ஏ., வரலாறு மற்றும் பொருளாதாரம் ஆகிய பாட பிரிவுகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர்.

நேற்று பி.எஸ்.சி., முதலாமாண்டு பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடந்தது.

அதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும், 24, 26, 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது என, அரசு கலைக்கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us