/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வர்ணஜாலம் காட்டிய வாணவேடிக்கை
/
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வர்ணஜாலம் காட்டிய வாணவேடிக்கை
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வர்ணஜாலம் காட்டிய வாணவேடிக்கை
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வர்ணஜாலம் காட்டிய வாணவேடிக்கை
ADDED : மே 31, 2024 03:31 AM
கரூர்: கரூர், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வானில் வர்ணஜாலம் காட்டிய வாணவேடிக்கையை பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழாவில், முக்கிய நாளான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. பசுபதி
பாளையம் அமராவதி ஆற்றங்கரையில் இந்நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து கம்பம் மேளதாளத்துடன், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அமராவதி ஆற்றில் விடப்பட்டது.
கரூர் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதியில் இருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கம்பம் விடும் நிகழ்ச்சி முடிந்தவுடன், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அப்போது, கீழிருந்து வானத்திற்கு பறந்து சென்ற மத்தாப்புகள், பல வண்ணங்களில் வெடித்து பூக்களை போல் சிதறிய காட்சி காண்போரின் மனதை கொள்ளை கொண்டது.