/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வரும் கரூர் தாலுகா அலுவலகம்
/
திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வரும் கரூர் தாலுகா அலுவலகம்
திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வரும் கரூர் தாலுகா அலுவலகம்
திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வரும் கரூர் தாலுகா அலுவலகம்
ADDED : பிப் 24, 2025 03:19 AM
கரூர: கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் கழிப்பிட வசதி இல்-லாததால், பொது மக்கள் அந்த இடத்தை கழிப்பிடமாக பயன்ப-டுத்தி வருகின்றனர்.
கரூர், தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவ-லகம், கிளைச்சிறை மற்றும் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு பல்வேறு பணிகள் காரணமாகவும், சிறையில் உள்ள கைதிகளை பார்வையிட உறவினர்கள் என தினமும் ஏராளமானோர் தாலுகா அலுவலகம் வந்து செல்கின்-றனர்.
ஜவஹர் பஜார் சாலையில் உள்ள, காமராஜ் சிலை முதல் மாரி-யம்மன் கோவில் வரை, இரண்டு கி.மீ, துாரம் வரை பொது கழிப்பிட வசதி இல்லை. கரூர் மாநகராட்சி பின்புறம் உள்ள கட்-டண கழிப்பிடமும், சில நேரங்களில் பூட்டப்பட்டுள்ளது. இதனால், இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டும் என்றால், ஒரு கி.மீ., துாரம் உள்ள, பஸ் ஸ்டாண்டுக்குதான் பொதுமக்கள் வர வேண்டி உள்ளது.
இந்நிலையில், கரூர் தாலுகா அலுவலகத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள, திறந்த வெளிப்பகுதியில் பொதுமக்கள், சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, தாலுகா அலுவலகத்தில், பொது கழிப்பிடம் கட்ட, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.