/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆத்துார் சாலையில் விளக்குகள் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
/
ஆத்துார் சாலையில் விளக்குகள் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ஆத்துார் சாலையில் விளக்குகள் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ஆத்துார் சாலையில் விளக்குகள் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 03, 2024 03:33 AM
கரூர்: ஈரோடு பிரிவு-ஆத்துார் விரிவாக்க சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர், ஈரோடு சாலை பிரிவில் இருந்து ஆத்துார் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ், லாரி உள்ளிட்ட வாக-னங்கள் செல்கின்றன.
குறிப்பாக, ஆத்துாரில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்துக்கு நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் சென்று வரு-கின்றன.
இதனால், கரூர்-ஈரோடு சாலை பிரிவு முதல் ஆத்துார் வரை, சமீ-பத்தில் சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்பட-வில்லை.
இதனால், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள ஈரோடு சாலை பிரிவு முதல், ஆத்துார் வரை இருளில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, புதிய விரிவாக்க சாலையில், மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகளை பொருத்த வேண்டியது அவசியம்.