sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி

/

தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி

தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி

தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி


ADDED : ஆக 08, 2024 01:47 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், கரூர் வெங்கமேட்டில் நடந்தது.

இதை தொடங்கி வைத்து கலெக்டர் தங்கவேல் கூறியதாவது: கரூர், சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் கைத்தறி துணிகள் உற்பத்தியில் முக்கிய பங்குவகிக்கின்றன. கைத்தறி உற்பத்தியில், 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாக இருப்பதால், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்தத்துறை நேரடி தொடர்பை கொண்டுள்ளது. இந்த சிறப்பு கைத்தறி கண்காட்சியில் கரூர் சரகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சாதா பெட்ஷீட், ஜக்காடு பெட்ஷீட், துண்டு, தலையணை உறை, காட்டன் புடவைகள் ஆகியவை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர், கூறினார்.

நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ், 15 பயனாளிகளுக்கு, 12.50 லட்சம் ரூபாய் கடன் அனுமதி ஆணைகளையும், 4 பயனாளிகளுக்கு சிறிய கைத்தறி குழுமத் திட்டத்தில் கட்டப்பட்டுவரும் தறிக்கூட கட்டுமான பணிகளுக்கு, 2.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அனுமதி ஆணைகள் என, 23 பயனாளிகளுக்கு, 14.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கைத்தறி உதவி இயக்குநர் சரவணன், துணை இயக்குநர்(காசநோய்) சரவணன் உள்பட

பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us