sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

/

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு


ADDED : மே 05, 2024 02:18 AM

Google News

ADDED : மே 05, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி:வெள்ளியணை அருகே பிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ராஜா, 42. இவரது மனைவி பிரீத்தி, 40. இவர்களது மகள் மிஸ்பா ஏஞ்சல், 4. மூன்று பேரும், டூவீலரில் வெள்ளியணையிலிருந்து புறப்பட்டு, பள்ளப்பட்டி உறவினர் வீட்டிற்கு சென்றனர். மீண்டும் டூவீலரில் நேற்று முன்தினம், சின்னதாராபுரம் பகுதியில் இருந்து தென்னிலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

காமாட்சிபுரம் காலனி அருகே வந்தபோது, எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மூன்று பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர் சிகிச்சை பெற்று வந்த ராஜா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

காரை ஓட்டி வந்த கண்ணன் என்பவர் மீது, சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us