/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இயற்கை வேளாண்மை திட்ட பயிற்சி முகாம்
/
இயற்கை வேளாண்மை திட்ட பயிற்சி முகாம்
ADDED : ஆக 05, 2024 02:04 AM
கரூர், கரூர், தான்தோன்றிமலை வட்டாரம், மூக்கணாங்குறிச்சியில், 'அட்மா' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அங்கக மற்றும் இயற்கை வேளாண்மை திட்டம் குறித்து பயிற்சி முகாம் நடந்தது. இதில், வேளாண் உதவி இயக்குனர் காதர் முகைதீன் கலந்துகொண்டு விளக்கமளித்தார்.
சொட்டுநீர் பாசனம் குறித்தும், வேளாண் துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்தும், மூக்கணாங்குறிச்சி வருவாய் கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானிய திட்டங்கள் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர் எல்சன் எடுத்து கூறினார்.
அங்கக வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை, அங்கக வேளாண் இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள், இயற்கை முறையில் பூச்சி நோய் கட்டுப்படுத்த பூச்சி விரட்டி தயாரிப்பது மற்றும் இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் வருமானத்தை பெருக்குவது குறித்து வேட்டமங்கலத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி பெரியசாமி விளக்கமளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஷர்மிளா உள்பட பலர் பங்கேற்றனர்.