ADDED : ஆக 21, 2024 01:33 AM
ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்
கரூர், ஆக. 21-
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், ஏழாவது மாவட்ட பேரவை கூட்டம், தலைவர் சாமுவேல் சுந்தர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், 70 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக, 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாதந்தோறும் மின் கட்டணத்தை கணக்கீடு செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண சலுகையை, மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் பாலகுமாரன், செயலாளர் பொன் ஜெயராம், தணிக்கையாளர் செந்தில் குமார் உள்பட, பலர் பங்கேற்றனர்.