sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாய்க்காலில் கொசு தொல்லையால் மக்கள் கடும் அவதி

/

வாய்க்காலில் கொசு தொல்லையால் மக்கள் கடும் அவதி

வாய்க்காலில் கொசு தொல்லையால் மக்கள் கடும் அவதி

வாய்க்காலில் கொசு தொல்லையால் மக்கள் கடும் அவதி


ADDED : ஜூலை 21, 2024 03:05 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;கரூர் அருகே பாசன வாய்க்கால், கழிவுநீர் வாய்க்காலாக மாறியுள்ளது. அதில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில், அமராவதி ஆற்றின் பாசன கிளை வாய்க்கால் தொடங்கி, லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் மீண்டும், அமராவதி ஆற்றில் கலக்கிறது. தற்போது, ஆண்டாங்கோவில் முதல் லைட் ஹவுஸ் கார்னர் வரை, பாசன வாய்க்காலின் கரைப்பகுதிகளில், ஏராளமான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதனால், மழை இல்லாத காலங்களில், பாசன வாய்க்கால் கழிவு நீர் வாய்க்காலாக மாறி விடுகிறது.

அதில் கழிவுநீர், பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கியுள்ளது. மேலும், வாய்க்காலில் மரம், செடி கொடிகள் அதிகளவில் முளைத்து புதர்போல் மண்டியுள்ளது. இதனால், வாய்க்காலில் கடந்த சில நாட்களாக கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இரவு நேரம் மட்டுமின்றி, பகல் நேரத்திலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, ஆண்டாங்கோவில் முதல் லைட்ஹவுஸ் கார்னர் வரை, பாசன வாய்க்காலை துார் வாரி கொசு மருந்து அடிக்க, ஆண்டாங்கோவில் பஞ்., நிர்வாகம் மற்றும் கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us