sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு


ADDED : மார் 12, 2025 07:55 AM

Google News

ADDED : மார் 12, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலருமான விஜயபாஸ்கர், கரூர் கலெக்டர் தங்கவேலிடம் மனு அளித்தார்.

அதில், கூறியிருப்பதாவது: கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில், 5,063 பேர்களின் இரட்டை பதிவு, முகவரி தெரியாத வாக்காளர்கள், இறப்பு ஆகிய பெயர்களை நீக்க வேண்டும் என மனு அளித்திருந்தோம். ஆனால், 4,420 பெயர்கள் இன்னும் நீக்கம் செய்யப்படாமல் உள்ளது. கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு பிரிவு சாலை நடுவில், புதிதாக உயர்மின் விளக்கு அமைக்க போடப்பட்டுள்ள கான்கிரீட் தளம் சாலையில், ஒரு அடி உயரத்தில் ஆபத்து விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் - கோவை சாலையில் இடதுபுறம் உள்ள வாய்க்கால் பாலத்தின் அருகே, சாலை மற்றும் அதன் ஓரங்களில் குழிகளாக உள்ளது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கான்கிரீட் தளம் மற்றும் குழிகளில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. வயதானவர்கள், பெண்கள் இரு சக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து பயணம் செய்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். இதனை, சரி செய்து உயர்மின் விளக்குகள் அமைக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us