sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காவிரி, அமராவதி கரையோரத்தில் தனியார் போர்வெல்களை முறைப்படுத்த வேண்டுகோள்

/

காவிரி, அமராவதி கரையோரத்தில் தனியார் போர்வெல்களை முறைப்படுத்த வேண்டுகோள்

காவிரி, அமராவதி கரையோரத்தில் தனியார் போர்வெல்களை முறைப்படுத்த வேண்டுகோள்

காவிரி, அமராவதி கரையோரத்தில் தனியார் போர்வெல்களை முறைப்படுத்த வேண்டுகோள்


ADDED : மே 21, 2024 11:05 AM

Google News

ADDED : மே 21, 2024 11:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: காவிரி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், தனியார் நிலங்களில், போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை முறை படுத்த வேண்டும்.

கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்தது. மேலும், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பெய்த மழையால், காவிரி, அமராவதி, பவானிசாகர் ஆறுகளில் கடந்த ஆகஸ்ட் மாதம், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, நீரை சேமித்து வைக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால், உபரி நீர் கடலில் கலந்தது.

நடப்பாண்டு கடந்த, நான்கு மாதங்களில் சராசரி மழையளவை விட, குறைந்த அளவில் மழை பெய்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள, இரண்டு நகராட்சிகள், 10 டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் 157 கிராம பஞ்சாயத்துக்களுக்கு, காவிரி, அமராவதி, நங்காஞ்சி ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள, கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அதில், அமராவதி, காவிரியாற்றில் மட்டும் குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் ஓடுகிறது. மற்ற ஆறு வறண்ட நிலையில் உள்ளது.

இந்நிலையில், காவிரி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், தனியார் நிலங்களில் போர்வெல் அமைத்து, ராட்சத மின் மோட்டார்கள் மூலம், தண்ணீரை உறிஞ்சி லாரிகள் மூலம், விற்பனை படுஜோராக நடக்கிறது. அதை அதிகாரிகள் கண்டு கொள் ளாததால், கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள், விவசாய கிணறுகளில் தண்ணீர் வற்றும் நிலை உள்ளது.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:

மேட்டூர் அணையில் இருந்து, குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதை வைத்து, குடிநீர் மற்றும் பயிர்களுக்கு, உயிர் தண்ணீராக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். திறக்கப்படும் தண்ணீரால், விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயரும். ஆனால், காவிரி, அமராவதி ஆற்று கரையோர பகுதி களில் வட்ட கிணறுகள், தனியார் நிலங் களில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்கள் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது.

அதை தவிர, நேரடியாக காவிரியாற்றில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர். இதனால், தனியார் நிலங்களில், அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களை வரைமுறைபடுத்த வேண்டும். கோடைக்காலம் முடியும் வரை, விதிமுறைகளை மீறி காவிரி, அமராவதி ஆற்று பகுதியில் உள்ள, தனியார் போர்வெல் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us