sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விதிமுறையை பின்பற்றாத லாரிகள்சிதறும் ஜல்லிகளால் விபத்து அபாயம்

/

விதிமுறையை பின்பற்றாத லாரிகள்சிதறும் ஜல்லிகளால் விபத்து அபாயம்

விதிமுறையை பின்பற்றாத லாரிகள்சிதறும் ஜல்லிகளால் விபத்து அபாயம்

விதிமுறையை பின்பற்றாத லாரிகள்சிதறும் ஜல்லிகளால் விபத்து அபாயம்


ADDED : மே 01, 2024 02:11 AM

Google News

ADDED : மே 01, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி;அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கட்டட பணிகளுக்கு தேவையான மணல், ஜல்லிக்கற்கள் ஆகியவை, அருகே உள்ள கிரஷரில் இருந்து லாரிகளில் எடுத்து செல்லப்படுகிறது. அவ்வாறு மணல், ஜல்லிகளை எடுத்துச் செல்லும் லாரிகள், தார்ப்பாய் போட்டு மூடி செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அந்த விதிமுறையை காற்றில் பறக்க விடுவதால், லாரியில் இருந்து மணல், ஜல்லிக்கற்கள் சிதறி சாலையில் விழுகின்றன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், ஜல்லிக்கற்கள் மீது ஏறி தடுமாறி விழுகின்றனர். சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. லாரியில் மணல், ஜல்லி, செங்கற்கள் எடுத்து செல்லும்போது தார்ப்பாய் போட்டு மூடி செல்ல வேண்டும் என்பதை, லாரி டிரைவர்கள் துளியும் மதிப்பதில்லை. இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

எனவே, மணல், ஜல்லி, செங்கற்கள் ஏற்றிச்செல்லும் டிராக்டர், லாரிகள், தார்ப்பாய் போட்டு மூடி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us