sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அரசு பழைய மருத்துவமனை முன் ஆறாக ஓடும் கழிவுநீர்: நோயாளிகள் அவதி

/

கரூர் அரசு பழைய மருத்துவமனை முன் ஆறாக ஓடும் கழிவுநீர்: நோயாளிகள் அவதி

கரூர் அரசு பழைய மருத்துவமனை முன் ஆறாக ஓடும் கழிவுநீர்: நோயாளிகள் அவதி

கரூர் அரசு பழைய மருத்துவமனை முன் ஆறாக ஓடும் கழிவுநீர்: நோயாளிகள் அவதி


ADDED : செப் 09, 2024 07:32 AM

Google News

ADDED : செப் 09, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் டவுன் பழைய அரசு மருத்துவமனை முன், கழிவுநீர் பல நாட்களாக ஆறாக ஓடுகிறது. இதனால், பொதுமக்கள், நோயாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.

கரூர் - வாங்கல் சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் அருகே, பல ஆண்டுகளாக தாலுகா மற்றும் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், கரூரில் அரசு மருத்துவ கல்லுாரி அறிவிப்பு வெளியான பின், அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி மருத்துவமனையாக மாற்றப்பட்டது.3

கடந்த, 2020ல் கரூர் அருகே, காந்தி கிராமத்தில் புதிதாக மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை, அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து, கரூர் டவுன் அரசு மருத்துவமனையில் இருந்து, சித்தா மருத்துவ பிரிவை தவிர மற்ற பிரிவுகள் அனைத்தும், புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. தற்போது, பழைய அரசு மருத்துவமனையில், சித்தா பிரிவு, ஆயுர்வேத சிகிச்சை, இயற்கை மருத்துவ பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவுகள் செயல்படுகிறது.

இந்நிலையில், பழைய அரசு மருத்துவமனை முன், சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் சாலையில், பல நாட்களாக ஆறாக ஓடிய வண்ணம் உள்ளது. இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும், கரூர் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், மருத்துவமனைக்கு வரும், நோயாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, சாக்கடை கால்வாயில் இருந்து, வெளியேறும் கழிவுநீரை தடுக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us