/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு செப்., 6ல் பேச்சு போட்டி
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு செப்., 6ல் பேச்சு போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு செப்., 6ல் பேச்சு போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு செப்., 6ல் பேச்சு போட்டி
ADDED : செப் 01, 2024 04:24 AM
கரூர்: தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாண-விகளுக்கு பேச்சு போட்டி செப்., 6ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்-துறை சார்பில் ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு செப்., 6ல் அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில் நடக்கி-றது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு போட்டி நடக்கிறது. காலை 9:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட அளவில், 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்ப-டவுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் இருவரை தனியாக தேர்வு செய்து சிறப்பு பரிசுத்தொகை வழங்கப்படும்.
கல்லுாரி மாணவ, மாணவியருக்கு முதல்வரின் அனுமதியுடன், கல்லுாரி கல்வி இணை இயக்குனர் வழியாகவும், பள்ளி மாணவ மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதி-யுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியாக போட்-டியில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04324 - 255077ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.