/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதல்வர் டிராபியில் மாணவர்கள் கிரிக்கெட் போட்டி
/
முதல்வர் டிராபியில் மாணவர்கள் கிரிக்கெட் போட்டி
ADDED : செப் 16, 2024 03:14 AM
கரூர்: முதல்வர் கோப்பை விளையாட்டில், கல்லுாரி மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடந்தது.
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்பட பல விளையாட்டு மைதானங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, 5 பிரிவுகளில் மாவட்ட அளவில், 27 வகையான போட்டிகளும், மண்டல அளவில், 53 வகையான போட்டிகள் நடக்கின்றன.
இதில், கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து, புலியூர் செட்டிநாடு பொறியில் கல்லுாரியில் மாணவர்களுக்கு கிரிக்கெட் போட்டிகளும் நடந்தன. இரண்டாவது நாளாக, நேற்று நடந்த போட்டியிலும், 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.