/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தோல்விகளை ஆராய்ந்தால் வெற்றி உறுதி: எஸ்.பி.,
/
தோல்விகளை ஆராய்ந்தால் வெற்றி உறுதி: எஸ்.பி.,
ADDED : ஜூலை 04, 2024 03:06 AM
கரூர்: '' தோல்விகளை ஆராய்ந்து செயல்பட்டால், வெற்றி உறுதியாக கிடைக்கும்,'' என,
எஸ்.பி., பிரபாகர் தெரிவித்தார்.
கரூர் அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்-டுக்கான வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடந்-தது. இளம் கலை, இளம் அறிவியல் முதல-மாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2024-25) கலந்-தாய்வு கூட் டம் கடந்த மே, 30ல் தொடங்கி, கடந்த, 1 வரை மூன்று கட்டங்களாக நடந்தது. நேற்று காலை கல்லுாரி கூட்ட அரங்கில் நடந்த, முதலாமாண்டுக்கான வகுப்புகள் தொடக்க விழாவில், எஸ்.பி., பிரபாகர் பேசியதாவது:
கல்லுாரி வாழ்க்கையை தொடங்கும் மாணவ, மாணவிகள், காலநிலையை உணர்ந்து செயல்-பட வேண்டும். படிக்கும் போது பெற்றோர்க-ளையும், கல்லுாரி விட்டு போகும் போது ஆசிரி-யர்களையும் நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள் இருவரும், வாழ்க்கையில் முக்கியமா-னவர்கள். வாழ்க்கை பாதையில், தோல்விகளை தவிர்க்க முடியாது. அந்த தோல்விகளை, ஆராய்ந்து செயல்பட்டால் வெற்றி உறுதியாக கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் படித்து கொண்டே இருக்கலாம். அதற்கான வேலை வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். நல்ல பழக்க வழக்கங்களை மாணவ, மாணவிகள் கடைப்பி-டிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
விழாவில், கல்லுாரி முதல்வர் (பொ) அலெக்-ஸாண்டர், டவுன்
டி.எஸ்.பி., செல்வராஜ் மற்றும் கல்லுாரி பேராசி-ரியர்கள்
பங்கேற்றனர்.