/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரி செலுத்தாதவர்கள் செலுத்த வேண்டுகோள்
/
வரி செலுத்தாதவர்கள் செலுத்த வேண்டுகோள்
ADDED : பிப் 25, 2025 04:36 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. 50,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தெரு விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட பணிகள், பேரூராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகி-றது.
அரவக்குறிச்சி பேரூராட்சியில், 2024-25ம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை உடனடியாக, பேரூ-ராட்சியில் இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும்.பேரூராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக, நிலு-வையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும். வரிகளை செலுத்தவில்லை என்றால் பாக்கி செலுத்-தாதவர்களின் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும்.பேரூராட்சி மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும், என்ற உயர்ந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும், 30க்குள் செலுத்த வேண்டும் என, பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்-டுள்ளது.