/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுபாலத்தை இரும்பு மூடியால் மூடவேண்டும்
/
சிறுபாலத்தை இரும்பு மூடியால் மூடவேண்டும்
ADDED : ஜூன் 28, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே குளத்துப்பாளையம் சாலையில், பல இடங்களில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல இடங்களில், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வட்டமாக குழி அமைக்கப்பட்டுள்ளது.
இதை சில இடங்களில் மூடாமல் வைத்துள்ளனர். பல இடங்களில் மூடிகள் சேதம் அடைந்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர்.
அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளும் குழியில் விழுந்து காயமடைகின்றனர். எனவே, சிறுபாலத்தில் உள்ள குழிகளை, இரும்பு மூடியால் மூட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.