ADDED : மார் 30, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்-திருச்சி
நெடுஞ்சாலை, காந்தி கிராமம் வழியாக நாள்தோறும் ஏராளமான பஸ்,
லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இதனால்,
காற்றில் பறக்கும் மணல் சாலையின் இருபுறமும் பல மாதங்களாக
தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் செல்ல
முடியாமல் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக டூவீலர்களில்
செல்பவர்கள், இரவு நேரங்களில் கீழே விழுகின்றனர். விபத்துகள்
ஏற்படுவதை தவிர்க்க, கரூர்-திருச்சி சாலை, காந்தி கிராமம் பகுதியில்
தேங்கிய மணலை அப்புறப்படுத்த, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்,
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

