/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி சிறுமி மாயம் போலீசில் தந்தை புகார்
/
பள்ளி சிறுமி மாயம் போலீசில் தந்தை புகார்
ADDED : ஆக 15, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை, சின்ன ஆண்டாள் தெருவை சேர்ந்த உதயகுமார், 53, பெயின்டர். இவரது, 16 வயது மகள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 12 இரவு குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு துாங்கினர். மறுநாள் காலையில் பார்த்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை.
தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.