/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கருப்பம்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்க மக்கள் பெரும் எதிர்பார்ப்பு
/
கருப்பம்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்க மக்கள் பெரும் எதிர்பார்ப்பு
கருப்பம்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்க மக்கள் பெரும் எதிர்பார்ப்பு
கருப்பம்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்க மக்கள் பெரும் எதிர்பார்ப்பு
ADDED : செப் 12, 2024 07:48 AM
கரூர்; கரூர் அருகே கருப்பம்பாளையம் பிரிவில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொது-மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கருப்-பம்பாளையம் பிரிவு உள்ளது. கரூர் நகரப் பகு-தியில் இருந்து, கருப்பம்பாளையம், சுக்காலியூர், செட்டிப்பாளையம், அப்பி பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல, மதுரை தேசிய நெடுஞ்-சாலையை கடந்து செல்ல வேண்டும். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள், கடந்து செல்ல முடியாமல் தடுமா-றுகின்றனர். அடிக்கடி அப்பகுதியில் விபத்து-களும் நடக்கிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது, கருப்-பம்பாளையம் பிரிவில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க கோரிக்கை வைக்-கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்பட-வில்லை. தற்போது, வாகனங்கள் அதிகரித்து விட்டதால், கருப்பம்பாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமப்
பகுதிகளில் இருந்து செல்லும் பொதுமக்கள், மதுரை தேசிய நெடுஞ்சாலையை எளிதாக, கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், விபத்துகளை தடுக்க கருப்பம்பா-ளையம் பிரிவில், ரவுண்டானா அமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

