/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தார் லோடு திருடிய ஊழியர் இருவர் கைது
/
தார் லோடு திருடிய ஊழியர் இருவர் கைது
ADDED : மே 04, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : தென்னிலை அருகே, ஆறு டன் தார் லோடு திருடியதாக, ஊழியர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், மொஞ்சனுார் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 37; கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், க.பரமத்தி அருகே முத்தனம்பாளையத்தில், ஆறு டன் தார் லோடு வைத்திருந்தார். அதை நிறுவனத்தின் மெஷின் ஆப்ரேட்டர் பசுபதி, 34; டிரைவர் கிருஷ்ணமூர்த்தி, 35; ஆகியோர் திருடியுள்ளனர். மதிப்பு மூன்று லட்ச ரூபாய். இதுகுறித்து, அருண்குமார் கொடுத்த புகாரின்படி பசுபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை, தென்னிலை போலீசார் கைது செய்தனர்.