/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூ - வீலர்கள் மோதல்: 2 பேர் பரிதாப பலி
/
டூ - வீலர்கள் மோதல்: 2 பேர் பரிதாப பலி
ADDED : ஆக 03, 2024 11:01 PM
குளித்தலை:கரூர் மாவட்டம் தொண்டமாங்கினம் பஞ்., கடன் வாங்கியூரை சேர்ந்த ராஜலிங்கம் மகன் கோபி, 23, கொத்தனார். அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மோகன், 18. இருவரும் மது வாங்குவதற்காக டூ - வீலரில், கொசூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று மாலை சென்றனர். மது வாங்கிக்கொண்டு, தோகைமலை - பாளையம் மெயின் ரோட்டில் சென்றனர். அதே ரோட்டில் எதிரே, கடவூர், கீரனுார் பஞ்., அணைக்கரைப்பட்டியை சேர்ந்த ரங்கன், 40, டூ - வீலரில் வந்தார். இரு டூ - வீலர்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் மோதிக் கொண்டன.
இதில் சம்பவ இடத்தில் கோபி பலியானார். பலத்த காயமடைந்த ரங்கன், கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மோகன் படுகாயத்துடன், மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தோகமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.