ADDED : செப் 03, 2024 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட விடுதலை களம் கட்சி சார்பில், நிறுவன தலைவர் நாகராஜன் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட, 68 டி.என்.டி., சமூகங்க-ளுக்கு, ஒற்றை ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும், ஜாதி வாரி-யாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்-ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் மோகன்ராஜ், செயலாளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்