sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புதிய கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?

/

புதிய கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?

புதிய கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?

புதிய கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?


ADDED : செப் 17, 2024 01:18 AM

Google News

ADDED : செப் 17, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதிய கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?

கரூர், செப். 17-

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து, ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் சாலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன், பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.

அதை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த கழிப்பிடம் சில மாதங் களுக்கு முன் சேதம் அடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. தற்போது, துாய்மை பாரத இயக்கம் சார்பில், ஏழு லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய கழிப்பிடம் கட்டப் பட்டுள்ளது.

ஆனால், புதிய கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடாமல், பூட்டி வைத்துள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளிப்பகுதியை கழிப்பிடமாக பயன் படுத்தி வருகின்றனர். இதனால், ஆண்டாங்கோவில் பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us