/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?
/
புதிய கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?
ADDED : செப் 17, 2024 01:18 AM
புதிய கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?
கரூர், செப். 17-
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து, ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் சாலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன், பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.
அதை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த கழிப்பிடம் சில மாதங் களுக்கு முன் சேதம் அடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. தற்போது, துாய்மை பாரத இயக்கம் சார்பில், ஏழு லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய கழிப்பிடம் கட்டப் பட்டுள்ளது.
ஆனால், புதிய கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடாமல், பூட்டி வைத்துள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளிப்பகுதியை கழிப்பிடமாக பயன் படுத்தி வருகின்றனர். இதனால், ஆண்டாங்கோவில் பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.