ADDED : மார் 30, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்
மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் இணைப்பு, குடிநீர்
குழாய் சீரமைப்பு பணிக்காக, குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்தது.
ஆனால், குழிகளை சரிவர மூடவில்லை. இதனால், அந்த பகுதியில் பெரும்பாலான
வீதிகளில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளது.
பொதுமக்கள் நடந்து
கூட செல்ல முடியாமல், அவதிப்படுகின்றனர். வேன், கார் உள்ளிட்ட
வாகனங்கள் எளிதாக செல்ல முடியவில்லை. இதனால், புதிதாக தார் சாலை
அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

