sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை அரசு மருத்துவமனையில் 2 நாளில் 10 பிரசவம்;மக்கள் வரவேற்பு

/

குளித்தலை அரசு மருத்துவமனையில் 2 நாளில் 10 பிரசவம்;மக்கள் வரவேற்பு

குளித்தலை அரசு மருத்துவமனையில் 2 நாளில் 10 பிரசவம்;மக்கள் வரவேற்பு

குளித்தலை அரசு மருத்துவமனையில் 2 நாளில் 10 பிரசவம்;மக்கள் வரவேற்பு


ADDED : அக் 31, 2025 12:35 AM

Google News

ADDED : அக் 31, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அரசு மருத்துவமனையில், இரண்டு நாளில் 10 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளன. அதில், 8 சுக பிரசவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. குளித்தலை, மாயனுார், தோகைமலை, அய்யர்மலை, பஞ்சப்பட்டி, தரகம்பட்டி, நங்கவரம், நச்சலுார், மருதுார் மற்றும் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை, முசிறி, தொட்டியம், கொளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கர்ப்பிணிகள், முதியோர்கள் என பலர் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

மேலும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை, கிராம சாலைகளில் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைபவர்களும் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனையில் தாய், சேய் பிரசவ வார்டு தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் ஐந்து பெண்களுக்கும், நேற்று ஐந்து பெண்களுக்கும் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் 8 சுக பிரசவமாகவும், இரண்டு அறுவை சிகிச்சை மூலமும் நடந்தது. இதில் நான்கு ஆண் குழந்தை, ஆறு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த மருத்துவமனையில் அதிகளவு சுப பிரசவங்கள் நடைபெறுவதால், கிராமப்புற பெண்கள் அதிகளவு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us