sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வஞ்சுலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா

/

வஞ்சுலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா

வஞ்சுலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா

வஞ்சுலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா


ADDED : நவ 19, 2024 01:47 AM

Google News

ADDED : நவ 19, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வஞ்சுலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா

கரூர், நவ. 19-

கார்த்திகை மாத திங்கட்கிழமை சோமவாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத முதல் சோமவாரமான நேற்று, கரூர் விசாலாட்சி அம்பிகா சமேத வஞ்சுலீஸ்வரர் கோவிலில், சங்காபிஷேகம் நடந்தது. 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, பின் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது, பின், தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

* குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோம வாரம் நிகழ்ச்சி நடந்தது. குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்கள் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட தானியங்களை கொண்டு வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

தற்போது ரோப் கார் (கம்பி வடஊர்தி) செயல்படுவதால், அதிகளவு பக்தர்கள் படியில் பயணம் செய்வதை தவிர்த்து, ரோப்காரில் பயணம் செய்து, மலை உச்சியில் உள்ள ரத்தினகிரீஸ்வரை வணங்கினர்.






      Dinamalar
      Follow us