sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு 13,433 கன அடி தண்ணீர் வரத்து

/

மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு 13,433 கன அடி தண்ணீர் வரத்து

மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு 13,433 கன அடி தண்ணீர் வரத்து

மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு 13,433 கன அடி தண்ணீர் வரத்து


ADDED : நவ 02, 2024 12:55 AM

Google News

ADDED : நவ 02, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், நவ. 2-

கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை தண்ணீர் வரத்து வினாடிக்கு, 13 ஆயிரத்து, 433 கன அடியாக இருந்தது. அதில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 12 ஆயிரத்து, 213 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால் உள்ளிட்ட, நான்கு பாசன வாய்க்காலில், 1,220 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 327 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு தண்ணீர் வரத்து, 365 கன அடியாக அதிகரித்தது. இதனால், அமராவதி அணையில் இருந்து ஆற்றில், 200 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 275 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 88.95 அடியாக இருந்தது.

ஆத்துப்பாளையம் அணை

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி

ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 29.44 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 23.81 அடியாக இருந்தது.

நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மழை நிலவரம்

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில், கிருஷ்ணராய

புரத்தில் மட்டும், 10.60 மி.மீ., மழை பெய்தது.






      Dinamalar
      Follow us