sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

 மாணவி மீது அவதுாறு 14 பேர் 'சஸ்பெண்ட்'

/

 மாணவி மீது அவதுாறு 14 பேர் 'சஸ்பெண்ட்'

 மாணவி மீது அவதுாறு 14 பேர் 'சஸ்பெண்ட்'

 மாணவி மீது அவதுாறு 14 பேர் 'சஸ்பெண்ட்'


ADDED : டிச 27, 2025 04:25 AM

Google News

ADDED : டிச 27, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மாணவியை அவதுாறு பேசிய 14 மாணவ, மாணவியர், கல்லுாரியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த, 17 வயது மாணவி, கரூர் அரசு கலைக்கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கிறார். இவர், கல்லுாரியில் பணியாற்றி வரும், பேராசிரியர் ஒருவருக்கு சாதகமாக பேசி வருவதாக கூறி, மாணவ, மாணவியர் சிலர், அவதுாறாக பேசியுள்ளனர்.

மனம் உடைந்த மாணவி, டிச., 15ல், மாத்திரைகளை சாப்பிட்டு, கல்லுாரி விடுதியில் தற்கொலைக்கு முயன்றார்.

மாணவி புகாரில், நான்கு மாணவியர், 10 மாணவர்கள் மீது, தற்கொலைக்கு துாண்டியதாக, கரூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். இதையடுத்து, மாணவ, மாணவியர், 14 பேரை சஸ்பெண்ட் செய்து, கல்லுாரி முதல்வர் சுதா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us