/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு கலை கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா
/
அரசு கலை கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா
ADDED : மார் 31, 2025 02:30 AM
குளித்தலை: குளித்தலை அரசு கலை கல்லுாரியில், 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார்.
பாரதிதாசன் பல்கலை தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ், 680 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார். அவர் பேசுகையில், ''கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி கற்று முன்னேறி செல்வது, நாட்டிற்கு பெரும் நன்மையை கொடுக்கும். பெற்றோரை மதித்து நடந்தால் வாழ்வில் வெற்றி பெற அனைத்து சாத்திய கூறுகளும் அமையும்,'' என்றார்.
பாரதிதாசன் பல்கலை பேரவை மன்ற உறுப்பினர் வேணு-கோபால், தமிழ்த்துறை தலைவர் ஜெகதீசன், ஆங்கிலத்துறை தலைவர் ஹில்டாதேன்மொழி, கணிதத்துறை தலைவர் உமா-தேவி, வணிகவியல் துறைத்தலைவர் பெரியசாமி, வணிக நிர்வா-கவியல் துறைத்தலைவர் வெங்கடேசன், தாவரவியல் துறைத்-தலைவர் வேணுகோபால், விலங்கியல் துறைத்தலைவர் பாபுநாத், வேதியியல் துறைத்தலைவர் பாலசுப்பிரமணி, இயற்-பியல் துறைத்தலைவர் ராமநாதன், உணவு மற்றும் ஊட்டச்சத்து துறைத்தலைவர் மகேந்திரன், உடற்கல்வி இயக்குனர் (பொ) பேராசிரியர் வைரமூர்த்தி மற்றும் இளைஞர் மேம்பாட்டு திறன் ஒருங்கிணைப்பாளர் பத்மப்பிரியா, வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.