sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆற்று மணலை கடத்தி பதுக்கி வைத்த 2 பேர் கைது: லாரிகள், கார் பறிமுதல்

/

ஆற்று மணலை கடத்தி பதுக்கி வைத்த 2 பேர் கைது: லாரிகள், கார் பறிமுதல்

ஆற்று மணலை கடத்தி பதுக்கி வைத்த 2 பேர் கைது: லாரிகள், கார் பறிமுதல்

ஆற்று மணலை கடத்தி பதுக்கி வைத்த 2 பேர் கைது: லாரிகள், கார் பறிமுதல்


ADDED : மே 31, 2025 06:35 AM

Google News

ADDED : மே 31, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, ஆற்று மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே ஏமூர் புதுாரில், ஆற்று மணல் கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கரூர் மாவட்ட தனிப்படை போலீசார், ஏமூர் புதுாரில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் சோதனை செய்தனர்.அப்போது ஆற்று மணல், 35 யூனிட் வரை கடத்தி மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆற்று மணலை கடத்தி மறைத்து வைத்ததாக கோவை மாவட்டம், சூலுாரை சேர்ந்த லாரி உரிமையாளர் சதாசிவம், 38, கரூர் மூக்காணங்குறிச்சியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சூர்யா, 34, ஆகிய இரண்டு பேரை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகள், ஒரு டயோட்டா எட்டீஸ் கார் மற்றும் 35 யூனிட் ஆற்று மணல் ஆகியவற்றையும், போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள லாரி உரிமையாளர் சதாசிவம் மீது, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் பகுதிகளில், மணல் கடத்தியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us